சில இடங்களில் மழை பெய்யக்கூடும்

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடல் பகுதியில் நிலவுகிறது.


மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடல் பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை (அக்.24) மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியது: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடக்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் ஆந்திர கடல் பகுதியில் தற்போது நிலவுகிறது.  அதேபோல, அரபிக்கடல் பகுதியில் உள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறவுள்ளது. இதன்காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் வியாழக்கிழமை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  சென்னை மற்றும் புறநகரை பொருத்தவரையில் நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 
 காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்:  அரபிக்கடல் பகுதியில் உருவாகும் தாழ்வு மண்டலம், மீண்டும் வலுப்பெற்று புயலாக மாறவும் வாய்ப்பு உள்ளது. அப்படி மாறும்போது தமிழக பகுதிகளை நோக்கி நகரும் பட்சத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். மீனவர்கள் ஆந்திரம் மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு இரண்டு நாள்களுக்கு செல்ல வேண்டாம் என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com