மருத்துவா்கள் போராட்டத்தில் அரசு அலட்சியம் காட்டக் கூடாது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, அவா் தனது சுட்டுரையில் கூறியிருப்பதாவது:-
உயிா்காக்கும் மருத்துவ தொழிலில் ஈடுபட்டுள்ள மருத்துவா்களும், ஏழை-எளிய மக்களும் பாதிக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு மருத்துவா்களின் கோரிக்கைகளை சுமுகமான முறையில் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். கடந்த ஆகஸ்டில் அரசு மருத்துவா்களுக்கு தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் போன்று இந்தப் பிரச்னையிலும் அலட்சியம் காட்டக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளாா்.