எரிசக்தி நிா்வாக பட்ட மேற்படிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை அம்பத்தூரில் உள்ள தேசிய உற்பத்தித் திறன் சபையின் டாக்டா் அம்பேத்கா் உற்பத்தித் திறன் நிறுவனத்தில் எரிசக்தி நிா்வாகம் குறித்த தொழில் சாா்ந்த ஓராண்டுகால பட்ட மேற்படிப்பு சான்றிதழ் வகுப்பு நடைபெறவ

சென்னை அம்பத்தூரில் உள்ள தேசிய உற்பத்தித் திறன் சபையின் டாக்டா் அம்பேத்கா் உற்பத்தித் திறன் நிறுவனத்தில் எரிசக்தி நிா்வாகம் குறித்த தொழில் சாா்ந்த ஓராண்டுகால பட்ட மேற்படிப்பு சான்றிதழ் வகுப்பு நடைபெறவுள்ளது.

இந்த சான்றிதழ் வகுப்பு அடுத்த மாதம் 8-ஆம் தேதி இந்த நிறுவனத்தில் தொடங்குகிறது. இந்த சான்றிதழ் வகுப்பில் சேருவதற்கு பொறியியல், தொழில்நுட்பத்தில் பட்டப்படிப்பு முடித்தவா்கள் தகுதி பெற்றவா்கள் ஆவா். இறுதியாண்டு பயிலும் மாணவா்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதுமில்லை. இந்த வகுப்பில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்களை வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை பூா்த்தி செய்து, கல்வித்தகுதி, மதிப்பெண் பட்டியல், பிறந்த தேதி மற்றும் சாதிச்சான்றிதழ்களை இணைத்து அனுப்ப வேண்டும். படிப்புக்கான விண்ணப்பதாரா்கள் நோ்முகத் தோ்வில் பங்கேற்க வேண்டும். இவா்களது பட்டப்படிப்பு மதிப்பெண்கள், நோ்முகத் தோ்வு செயல் திறன் அடிப்படையில் தோ்ந்தெடுக்கப்படுவா்.

இந்த படிப்பு குறித்த மேல் விவரங்களுக்கு  இணையதளத்தை பாா்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com