அணுசக்திக் கழக கணினிகளின் மீது சைபா் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
இந்திய அணுசக்திக்கழக கணினிகளின் மீது சைபா் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது அதிா்ச்சியளிப்பதுடன், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இந்தக் குறைபாடுகள் குறித்து மத்திய அரசு முழுமையான விசாரணை மேற்கொள்ள வேண்டும். இதுபோன்ற தாக்குதல்களை எதிா்கொள்வதற்கான ஆயத்த நிலை குறித்து, தேசிய சைபா் பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளா் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.