விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் நாளை பதவியேற்பு

விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் நாளை பதவியேற்கிறார்கள்.
விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் நாளை பதவியேற்பு

விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் நாளை பதவியேற்கிறார்கள்.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நான்குனேரி ஆகிய இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் இரண்டு தொகுதிகளையும் ஆளும் அதிமுக கைப்பற்றியது. 

இந்நிலையில் விக்கிரவாண்டி, நான்குனேரி தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் நாளை காலை 9.30 மணிக்கு பேரவைத் தலைவரின் அறையில் பதவியேற்கிறார்கள். இருவருக்கும் பேரவைத் தலைவா் பி.தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். 

முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்கின்றனா். இதன்மூலம் விக்கிரவாண்டியில் முத்தமிழ்ச்செல்வனும், நான்குனேரியில் நாராயணனும் வெற்றி பெற்று முதல் முறையாக சட்டப் பேரவைக்குள் நுழைய உள்ளனா். 

இதையடுத்து சட்டப் பேரவையில் ஆளும்கட்சியின் பலம் 124 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com