கீழடி அகழாய்வில் செங்கல் தரைத்தளம் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில், செங்கல்லால் உருவாக்கப்பட்ட தரைத்தளம் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது
திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்ட செங்கல்லால் உருவாக்கப்பட்ட தரைத்தளம்.
திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்ட செங்கல்லால் உருவாக்கப்பட்ட தரைத்தளம்.


சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில், செங்கல்லால் உருவாக்கப்பட்ட தரைத்தளம் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. 
       தமிழக அரசு சார்பில், கீழடியில் 5 -ஆம் கட்ட அகழாய்வு தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதுவரை கீழடியில் ஆயிரக்கணக்கான  தொல்பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதை பரிசோதித்ததில், 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது தெரியவந்துள்ளது.    இதுவரை, இப்பகுதியிலுள்ள 5 பேர்களது நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டதில், மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறை கிணறுகள், இரும்பு பொருள்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் குவளை என 750-க்கும் மேற்பட்ட  பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும், அதிகளவில் சுவர்கள், கால்வாய்கள், தண்ணீர் தொட்டி ஆகியவைகளும்  கண்டெடுக்கப்பட்டுள்ளன.  
     தற்போது, நீதி என்பவரது நிலத்தில் தோண்டப்பட்ட குழியிலிருந்து செங்கல்லால் உருவாக்கப்பட்ட தரைத்தளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தளம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், பண்டைய காலத்தில் வீடுகளில் தரைத்தளங்கள் செங்கல்லால் அமைக்கப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com