சர்வதேச புரோ லீக் ஆணழகன் போட்டி சென்னையில் வரும் அக்டோபர் 18 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது என நேச்சுரல் பாடிபில்டிங் யூனியன் அமைப்பு பொதுச் செயலாளர் எஸ்.பி. ரவுத்தரே தெரிவித்துள்ளார்.
அவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஐரோப்பிய வீரர்கள் 100 பேர் உள்பட மொத்தம் 350 வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கின்றனர்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அண்ணா கலையரங்கில் நடைபெறும் இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் பாடிபில்டிங் போட்டிகள், பெஸ்ட் பிசிக் சுற்றுக்கள் நடக்கின்றன.
பிரதமர் நரேந்திரமோடி துவக்கி வைத்த பிட் இந்தியா இயக்கத்தோடு இணைந்து செயல்படும் பொருட்டு முதன்முறையாக 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பிட் கிட் எனும் பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை பேணும்பொருட்டு நடத்தப்படும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது என்றார்.