சென்னை: தமிழக அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்படும் நடவடிக்கைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனத்துக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டு ஜூன் மாதம் தேர்வுகள் நடந்து முடிந்தன.
இந்த தேர்வில் நடைமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி தொடரப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசு மருத்துவமனைகளில் செவிலியர் நியமனத்துக்கான நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
மனு மீது மருத்துவ தேர்வு வாரியம் பதிலளிக்கவும் உத்தரவிட்டப்பட்டுள்ளது.