பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணை வெளியீடு 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணையை திங்கள் மாலை  அரசுத்தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ளார்.
பத்தாம் வகுப்பு மாணவர்கள்
பத்தாம் வகுப்பு மாணவர்கள்

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான புதிய அட்டவணையை திங்கள் மாலை  அரசுத்தேர்வுகள் இயக்குநர் வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் பத்தாம் வகுப்பு மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலப்பாடத்திற்கான இருதாள்கள் ஒரே தாள்களாக மாற்றி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது.

அதையடுத்து ஏற்கனேவே வெளியிடப்பட்ட 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணையை மாற்றி, புதிய அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2020 மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 13ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது; மே 4ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்

அதன் முழுமையான விபரம் வருமாறு:

மார்ச் 27 - மொழிப்பாடம்

மார்ச் 28 - விருப்பப்பாடம்

மார்ச் 31 - ஆங்கிலம்

ஏப்.3 - சமூக அறிவியல்

ஏப். 7 - அறிவியல்

ஏப். 13 - கணிதம்

* மே 4ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com