நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை மீறி புதுக்கோட்டை நகரில் திறந்திருந்த செல்லிடப்பேசி ரீசார்ஜ் கடைகள் மற்றும் ஜெராக்ஸ் கடைகளுக்கு வருவாய்த்துறை அலுவலர்கள் வியாழக்கிழமை அதிரடியாகப் பூட்டி சீல் வைத்தனர்.
புதுக்கோட்டை சார் ஆட்சியர் எம்எஸ்.தண்டாயுதபாணி தலைமையில் வட்டாட்சியர் பி.முருகப்பன் உள்ளிட்ட குழுவினர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
18 கடைகளுக்கு தற்போது சீல் வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.