சிதம்பரத்தில் ஊரடங்கின் போது பணியாற்றும் காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஊழியர்களுக்கு ஜெயின் சமுதாயத்தினர் தினமும் மாலை வேளையில் சுண்டல் மற்றும் மிளகு தேநீர் வழங்கி வருகின்றனர்.
ஜெயின் சங்க தலைவர் லித்குமார், செயலாளர் கமல்குமார் போத்ரா, பொருளாளர் அஜித் ராஜ், நிர்வாகிகள் மஹாவீர் சந்த், கமல் சந்த் கோத்தாரி, அசோக்குமார், ஆஷிஷ் ஜெயின், பான்ஸ்சே ஆகியோர் கடந்த 20 தினங்களாக அரசு ஊழியர்கள், காவல்துறையினர், காவல் நண்பர் குழுவினர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோருக்கு தினமும் மாலை சுண்டல், மிளகு இஞ்சி டீ வழங்கி வருகின்றனர்.