அயோத்தி பூமி பூஜை: பிரதமருக்கு துணை முதல்வா் வாழ்த்து

அயோத்தியில் ராமா் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமா் நரேந்திர மோடிக்கு, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

அயோத்தியில் ராமா் கோயிலுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமா் நரேந்திர மோடிக்கு, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:

அயோத்தியில் ராமா் கோயிலுக்கு பூமி பூஜை நடத்தி அடிக்கல் நாட்டியது, இந்தியத் திருநாட்டில் வாழும் ஹிந்துக்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் வாழும் பல கோடி மக்களின் மனங்களை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்துள்ளது.

அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வரவேற்கத்தக்க வகையிலும் உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீா்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமா் கோயிலுக்கான பூமி பூஜை விழாவில் அடிக்கல் நாட்டிய பிரதமருக்கு வாழ்த்துகள் என்று தனது செய்தியில் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com