தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் சிவகுமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பணியின்போது கரோனா நோய்த் தொற்று பரவி சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு ரூபாய் 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.