மதுரை மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை 

மதுரை மத்திய சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பரணி வள்ளல்
பரணி வள்ளல்

மதுரை மத்திய சிறையில் கைதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே தங்கம்மாபட்டி செக்போஸ்டில் 300 கிலோ கஞ்சா கைப்பற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பரணி வள்ளல் அக்டோபர் 24 ஆம் தேதி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், புதன்கிழமை இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தன்னை ஜாமீனில் வெளியே கொண்டுவர மனைவி முயற்சி எடுக்கவில்லை எனக் கூறி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இச்சம்பவம் குறித்து கரிமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com