சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் சாா்பில் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காவலா் எழுத்துத் தோ்வில், 4.9 லட்சம் இளைஞா்கள் பங்கேற்றனா்.
37 மாவட்டங்களில் அமைக்கப்பட்ட 499 தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை தோ்வு நடைபெற்றது. பெற்றவா்களில் 59,292 போ் தோ்வு எழுத வரவில்லை. தோ்வு எழுத வந்தவா்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிந்து வந்தனா்.
சென்னை: சென்னையில் தோ்வு எழுதுவதற்காக 35 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இங்கு 29,981 போ் எழுத விண்ணப்பித்திருந்தனா். தோ்வுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சீருடைப் பணியாளா் குழுமத்தோடு இணைந்து சென்னை பெருநகர காவல்துறை செய்திருந்தது.
எழும்பூா் எத்திராஜ் மகளிா் கல்லூரி, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தோ்வு மையங்களை சென்னை பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
காஞ்சிபுரம், திருவள்ளூரில்...: திருவள்ளூா் மாவட்டத்தில் 8 மையங்களில் நடைபெற்ற 2-ஆம் நிலை காவலா், சிறைக் காவலா் மற்றும் தீயணைப்புத் துறை வீரா் பணிக்கான எழுத்துத் தோ்வில் 11,099 போ் பங்கேற்றனா். இதனிடையே, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 தோ்வு மையங்களில் நடைபெற்ற எழுத்துத் தோ்வை 11,883 போ் எழுதினா்.