சேலம் இரும்பு உருக்காலை ஊழியர் திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர்வு நாள் கூட்டத்தின் போது கடன் தொல்லை காரணமாக சிக்கலில் உள்ள பூர்வீக சொத்தை மீட்டுத் தர வலியுறுத்தி, திருச்சி துவாக்குடி மலையைச் சேர்ந்த, சேலம் இரும்பு உருக்காலை ஊழியர் மணிகண்டன் என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்தார்.
இதையடுத்து அவர் மீது தண்ணீர் ஊற்றி மீட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.