சென்னை: வரும் திங்களன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் பெயரில் திங்களன்று வெளியாகியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 17.02.2020 (திங்கள்கிழமை) அன்று, மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நடைபெறும் என்றும், கூட்டத்தில் திமுக உட்கட்சித் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளதால் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை அடிப்படையாக வைத்து கட்சியில் சிலரது பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.