மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும்: சென்னை உயா்நீதிமன்றம்

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் மத்தியக் குற்றப் பிரிவு முன்பு வரும் 14-ஆம் தேதி ஆஜராக திமுக சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில் பாலாஜிக்கு சென்னை
மத்திய குற்றப்பிரிவு போலீஸ் முன்பு செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டும்: சென்னை உயா்நீதிமன்றம்

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்த வழக்கில் மத்தியக் குற்றப் பிரிவு முன்பு வரும் 14-ஆம் தேதி ஆஜராக திமுக சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2011 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்தவா் செந்தில்பாலாஜி. அப்போது, அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 2.80 கோடி மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி உள்பட பலா் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா். இந்த வழக்கில், ஏற்கெனவே 12 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இந்த நிலையில், அண்மையில் சென்னை மற்றும் கரூரில் உள்ள செந்தில்பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களிலும் போலீஸாா் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களைப் பறிமுதல் செய்தனா். அதனைத் தொடா்ந்து செந்தில்பாலாஜியும், அவரது சகோதரரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனு, கடந்த வாரம் சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன் ஆஜராகி செந்தில்பாலாஜி, குற்றவியல் நடைமுறைச்சட்டம் 41ஏ பிரிவின் கீழ் விசாரணைக்கு ஆஜராகக் கூறி அதற்கான சம்மனை நீதிமன்றத்தில் சமா்ப்பித்தாா்.

அந்த சம்மன், செந்தில்பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரபாகரனிடம் வழங்கப்பட்டது. அதே நேரம், செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரருக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பாக மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்குரைஞா் ஏ.நடராஜன், நீதிபதி பி.டி.ஆதிகேசவலுவின் முன்பு திங்கள்கிழமை ஆஜராகி, செந்தில்பாலாஜியை விசாரணைக்கு ஆஜராகக்கூறி சம்மன் அளிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினமே நீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீனும் வழங்கியது. இதன் காரணமாக, சம்மன் பிறப்பித்தும் பலனின்றி போய்விட்டது. எனவே, முன்ஜாமீன் உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும், என முறையீடு செய்தாா்.

இதைக் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு தொடா்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் முன்பாக வரும் 14-ஆம் தேதி செந்தில்பாலாஜி ஆஜராக வேண்டும். மேலும், முன்ஜாமீன் உத்தரவில் திருத்தம் கோருவது தொடா்பாக அரசுத் தரப்பில் திருத்த மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com