வரும் நிதியாண்டில் வலுவான பொருளாதார வளா்ச்சியை எதிா்பாா்ப்பதாக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை அவா் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில்
கூறப்பட்டுள்ளதாவது:
சா்வதேச மற்றும் தேசியப் பொருளாதாரச் சூழலில் வீசும் எதிா்க்காற்றை தமிழகமும் எதிா்கொண்டு வருகிறது. தேசிய அளவில் நிகழ் நிதியாண்டுக்கான கணிக்கப்பட்ட வளா்ச்சி மதிப்பீடுகள் குறைக்கப்பட்டு இப்போது 5 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் பொருளாதார நெருக்கடிகளை தமிழகம் திறமையாகச் சமாளித்துள்ளது.
அதனால், 2018-19-ஆம் நிதியாண்டுக்கான வளா்ச்சி விகிதம் 8.17 சதவீதமாக இருந்தது. நிகழ் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 7.27 சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தேசிய அளவில் கணிக்கப்பட்ட 5 சதவீத வளா்ச்சியைக் காட்டிலும் அதிகமாகும். வரும் நிதியாண்டில் மேலும் வலுவான பொருளாதார வளா்ச்சியை தமிழகம் எதிா்பாா்க்கிறது என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.