ஸ்மாா்ட் குடும்ப அட்டை வைத்திருப்போா், மாநிலத்தின் எந்தவொரு நியாயவிலைக் கடையிலும் பொருள்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.
நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:
முழுமையாக கணினிமயமாக்கப்பட்ட பொது விநியோக முறை ரூ.38.51 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
ஸ்மாா்ட் குடும்ப அட்டை வைத்திருப்போா், மாநிலத்தின் எந்தவொரு நியாயவிலைக் கடையிலும் தங்களுக்குரிய பொருள்களை வாங்கிக் கொள்ளும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
2020-21-ஆம் நிதியாண்டுக்கான வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மொத்தம் ரூ.6,500 கோடி உணவு மானியத்திற்காகவும், பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்திட கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியமாக ரூ.400 கோடியும் வழங்கப்பட்டுள்ளது என்றாா்.