தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில், திருவாரூரில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது. மொத்தமாக திமுக - 3, இந்திய கம்யூனிஸ்ட் - 2
அதிமுக - 5 இடங்களைப் பெற்றுள்ளது.
தேர்தல் முடிவு விபரங்கள்:
1.திருவாரூர் ஒன்றியக் குழு பெருந்தலைவராக திமுக- வை சேர்ந்த தேவா தேர்வு.
2.நீடாமங்கலம் ஒன்றியக் குழு பெருந்தலைவராக திமுக-வைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் தேர்வு.
3.கொரடாச்சேரி ஒன்றியக் குழு பெருந்தலைவராக திமுக-வைச் சேர்ந்த உமா பிரியா தேர்வு.
4.திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழு பெருந்தலைவராக இந்திய கம்னியூஸ்ட் கட்சி அ.பாஸ்கர் தேர்வு.
5.கோட்டூர் ஒன்றியக் குழு பெருந்தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மணிமேகலை தேர்வு.
6.நன்னிலம் ஒன்றியக் குழு பெருந்தலைவராக அதிமுக-வைச் சேர்ந்த விஜயலட்சுமி குணசேகரன் தேர்வு.
7.குடவாசல் ஒன்றியக் குழு பெருந்தலைவர் தலைவராக அதிமுக- வைச் சேர்ந்த கிலாரா செந்தில் தேர்வு.
8.வலங்கைமான் ஒன்றியக் குழு பெருந்தலைவராக அதிமுக-வைச் சேர்ந்த சங்கர் தேர்வு.
9.மன்னார்குடி ஒன்றியக் குழு தலைவராக அதிமுக-வைச் சேர்ந்த மனோகரன் தேர்வு.
10.முத்துப்பேட்டை ஒன்றியக் குழு பெருந்தலைவராக அதிமுக-வைச் சேர்ந்த
கனியமுதா தேர்வு.