தமிழ்நாடு
தமிழகம், புதுவையில் வறண்ட வானிலையே நிலவும்: சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வறண்ட வானிலையே நிலவும்.
காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் நாளை மற்றும் நாளை மறுநாள் தென்கடலோர பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.