பிசான பருவ சாகுபடிக்கு வரும் 27ஆம் தேதி முதல் வடக்குப்பச்சையாறு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், நாங்குநேரி வட்டம் பத்தை, களக்காடு, வடமலை சமுத்திரம் உள்ளிட்ட 14 கிராமங்களில் உள்ள 9 ஆயிரத்து 592 புள்ளி 91 ஏக்கர் நிலங்கள் பாசனத்துக்கு வரும் 27ஆம் தேதி முதல், மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை, நாள் ஒன்றுக்கு வினாடிக்கு 100 கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறக்க உத்தரவிட்டு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
எனவே, விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் முதல்வர் அதில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த அணையின் மூலம் 110 குளங்களும், 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களும் பயனடைகின்றன.