பெரியார் குறித்த கருத்தை ரஜினி திரும்பப் பெற வேண்டும்: முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்

பெரியார் குறித்த கருத்தை நடிகர் ரஜினி திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

பெரியார் குறித்த கருத்தை நடிகர் ரஜினி திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். 

பெரியாா் குறித்து கருத்து தெரிவித்த நடிகா் ரஜினிகாந்த்துக்கு எதிராக பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அவர்மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் நாராயண்சாமி இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

'பகுத்தறிவு ஆசானாக இருந்து மக்கள் மத்தியில் இருக்கும் மூட நம்பிக்கைகளை போக்க வாழ்நாள் முழ்வதும் போராடியவர், தனிமனித உரிமைக்கும் தனது வாழ்நாளை அற்பணித்தவர் தந்தை பெரியார்.

ரஜினிகாந்த் அவர்கள் விழா ஒன்றில் பேசும்போது பெரியார் பற்றி விமர்சனம் செய்துள்ளார். உண்மையாக அந்த சம்பவம் நடந்ததா என ஆராய்ந்து பேசி இருக்க வேண்டும். சில தகவல்களை வைத்து தந்தை பெரியாரையும், திராவிடக் கழகத்தையும் பேசி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

எந்தவிதமான முகாந்திரமும் இல்லாமல் பேசியிருப்பது வருத்தத்திற்குரியது. அவர் கருத்தை திரும்பப் பெற்று இந்த சர்ச்சைக்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த சர்ச்சையில் அவர் தலையிடாமல் இருப்பது நல்லது' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com