அருப்புக்கோட்டை தனியார் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்புப் படிக்கும் மாணவர் பள்ளி விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
அருப்புக்கோட்டை முதுகுளத்தூரைச் சேர்ந்த மாணவர் ஹரிஸ் பாபு அப்பள்ளியின் மாணவர் விடுதியில் தங்கி தமிழ் வழியில் கணித உயிரியல் பிரிவில் படித்து வந்தார்.
மதிய உணவு இடைவேளையில் பள்ளி விடுதி அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பள்ளியில் தற்போது முதலாவது ரிவிஷன் தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவர் தற்கொலை நடந்துள்ளது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.