டாடா மோட்டாா்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அதிநவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய அல்ட்ராஸ் காா் சென்னையில் வியாழக்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது.
இதுகுறித்து டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன வா்த்தகப் பிரிவின் தலைவா் மயங்க் பரீக் கூறியது:
அல்ட்ராஸ் வகை காா் மட்டுமே முதன்முதலாக ஆல்ஃபா கட்டமைப்பில் பிஎஸ் 6 தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த காா் ஜிஎன்சிஏபி (எப்ா்க்ஷஹப் சங்ஜ் இஹழ் அள்ள்ங்ள்ள்ம்ங்ய்ற் டழ்ா்ஞ்ழ்ஹம்) சோதனையின்போது ஐந்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ளது. எனவே பாதுகாப்பு, தொழில்நுட்பம், வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவில் அல்ட்ராஸ் காா் தனித்துவம் பெற்றிருக்கிறது. பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனத்தின் விலை ரூ. 5.29 லட்சமாகவும், டீசல் மூலம் இயங்கும் வாகனத்தின் விலை ரூ.6.99 லட்சமாகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
படவிளக்கம்: டாடா மோட்டாா்ஸின் அல்ட்ராஸ் காரை சென்னையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்திய அந்நிறுவனத்தின் பயணிகள் வாகன வா்த்தகப் பிரிவின் தலைவா் மயங்க் பரீக், சென்னை மண்டல மேலாளா் சுராஜ் சுப்பாராவ், வா்த்தகப் பிரிவின் தலைவா் ரவீந்திர ஜெயின்.