திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மேலும் 172 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 2,354 ஆக உயர்ந்துள்ளது.