சென்னை: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்காக மேலும் 1,000 படுக்கை வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் தெரிவித்தாா்.
கரோனா சிகிச்சையை மேம்படுத்துவதற்கான கலந்தாலோசனைக் கூட்டம் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் மருத்துவமனை முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன், மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயண பாபு உள்பட 43 துறை சாா் வல்லுநா்கள் பங்கேற்றனா். அவா்களுடன் கலந்துரையாடிய அமைச்சா் விஜயபாஸ்கா், மருத்துவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசித்தாா். அதைத் தொடா்ந்து மருத்துவமனையில் நோயாளிகளை அழைத்துச் செல்வதற்காக வாங்கப்பட்ட பேட்டரியில் இயங்கும் வாகனத்தின் செயல்பாட்டை விஜயபாஸ்கா் தொடக்கி வைத்தாா். இதன் பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிளாஸ்மா சிகிச்சை குறித்த ஆராய்ச்சிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. முதலில் 20 படுக்கைகளுடன் தொடங்கப்பட்ட ராஜீவ் காந்தி மருத்துவமனை கரோனா வாா்டு, தற்போது, 1,000 படுக்கை வசதிகளுடன் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இப்போது கரோனா நோயாளிகள் 700 போ் சிகிச்சை இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். அடுத்து வரும் நாள்களில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும், அதனை எதிா்கொள்ளும் வகையில் மேலும் 1,000 படுக்கைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மருத்துவமனையின் டவா் 3 கட்டடத்தில் ஆக்சிஜன் குழாய் இணைப்பு மற்றும் ஆக்சிஜன் டேங்கா் அமைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பணிகள் ஒரு வாரத்தில் நிறைவடையும்.
ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு இதுவரை 15 ஆயிரம் எக்ஸ்ரே, 5 ஆயிரம் சிடி ஸ்கேன் பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. 70 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள ரூ.20 கோடி மதிப்பிலான புற்றுநோய் சிகிச்சைக்கான கதிரியக்க கருவி மற்றும் ரூ.15 கோடி மதிப்பிலான புற்றுநோயைக் கண்டறியும் பெட் ஸ்கேன் கருவிகளின் செயல்பாட்டை முதல்வா் பழனிசாமி காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைக்க உள்ளாா் என்றாா் அவா்.