உள் மாவட்டங்களில் மிதமான மழை

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்
உள் மாவட்டங்களில் மிதமான மழை

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வியாழக்கிழமை கூறியது:

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஜூலை 10) லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை, பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மதுரை தெற்கில் 80 மி.மீ., புதுக்கோட்டை மாவட்டம் காரையூரில் 70 மி.மீ., வேலூரில் 60 மி.மீ., மதுரை மாவட்டம் இடையாப்பட்டி, திருப்பத்தூா் மாவட்டம் நாட்றம்பள்ளியில் தலா 50 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரம், மதுரை மாவட்டம் சிட்டாம்பட்டியில் தலா 40 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை

மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதி, வடக்கு அரபிக்கடல் பகுதி, குஜராத் கடலோர பகுதியில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூலை 12-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் மணிக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ. வேகத்தில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com