தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான திமுகவை சேர்ந்த கீதா ஜீவனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கீதாஜீவன் தூத்துக்குடி போல்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கு கரோனா தொற்று அறிகுறி இருந்ததால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவரது மகள் மற்றும் மருமகனுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மூவரும் வீட்டில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என இதுவரை 19 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.