செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 288 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இன்று மேலும் 288 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 13,005-ஆக உயர்ந்துள்ளது. அதே சமயத்தில் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டத்தில் நோய் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.