சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் 12,880 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மற்ற மண்டலங்களில் கரோனா தொற்று மெல்ல குறைந்து வரும் நிலையில் அம்பத்தூர் மண்டலத்தில் கரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.
சென்னையிலேயே அதிகபட்சமாக இருந்த கோடம்பாக்கத்தில் 1,613 பேருக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அம்பத்தூரில் 1266 பேர் கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதையும் படிக்கலாம்.. நியூ யார்க்கில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் நாய் மரணம்
சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 98 ஆயிரமாக இருக்கும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை சுமார் 84 ஆயிரமாக உள்ளது. தற்போது ஒட்டுமொத்தமாக 12,785 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 2,092 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
சென்னையிலேயே கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் அம்பத்தூர் மண்டலத்தில் உள்ள நோயாளிகளின் விகிதம் 22% ஆக உள்ளது. இதுதான் அதிகபட்ச விகிதமாகும்.