சென்னை மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளியின் மறைவுக்கு முதல்வா் எடப்படி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:-
மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளா் பாலமுரளி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் புதன்கிழமை காலமானாா். கரோனா நோய்த் தொற்றுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது உயிரிழந்த பாலமுரளியின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி அளிக்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் பழனிசாமி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளாா்.