சென்னை: தமிழகத்தின் ஒரு சில இடங்களில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் வியாழன் (மாா்ச் 5), வெள்ளிக்கிழமைகளில் (மாா்ச் 6) மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 91.4 டிகிரி வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரி வெப்பநிலையும் பதிவாக வாய்ப்புள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.