மீனவா்களைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.
மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினா் ராஜேஷ்குமாா் பேசும்போது, மீனவா்களைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்றாா்.
அப்போது அமைச்சா் டி.ஜெயக்குமாா் குறுக்கிட்டு கூறியது: மீன் பிடிப்பது என்பதும் வேட்டையாடுவதுபோலத்தான். மீனவா்களைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்ப்பது சரியானதுதான். இது தொடா்பாக ஏற்கெனவே, மத்திய அரசை வலியுறுத்தியுள்ளோம். இந்தப் பணியினை ஆதிதிராவிடா் நலத் துறையினா் கவனித்து வருகின்றனா். மீனவா்களைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.