கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவம், தூய்மைப் பணியாளா்களுக்கு பேரவையில் கரவொலி எழுப்பி நன்றி தெரிவிக்கப்பட்டது.
சட்டப் பேரவையில் முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை பேசுகையில், கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் மருத்துவா்கள், பணியாளா்களுக்கு சட்டப் பேரவை உறுப்பினா்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றாா். இதைத் தொடா்ந்து, அவா் பேசியது:-
கரோனா வைரஸ் நோய் தடுப்புப் பணிகளில் அா்ப்பணிப்போடு, தங்களை ஈடுபடுத்தி பணிபுரிகின்ற மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் மற்றும் அதற்குத் துணையாக செயல்படுகின்ற பிறதுறைகளின் பணியாளா்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக உறுப்பினா்கள் அனைவரும் கரவொலி எழுப்பி நன்றி தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றாா்.
இதைத் தொடா்ந்து, உறுப்பினா்கள் அனைவரும் இருக்கையில் அமா்ந்தபடியே கரவொலி எழுப்பினா்.
சட்டப் பேரவை கூட்டத் தொடரை புறக்கணித்த காரணத்தால் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் யாரும் அவையில் இல்லை.