விழுப்புரத்தில் காய்கறி விலை பன்மடங்கு உயர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த உள்ளதால், பொருள்களை வாங்க ஏராளமான மக்கள் கடைவீதிகளில் திரண்டுள்ளனர். 
விழுப்புரத்தில் காய்கறி விலை பன்மடங்கு உயர்வு

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மாலை முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்த உள்ளதால், பொருள்களை வாங்க ஏராளமான மக்கள் கடைவீதிகளில் திரண்டுள்ளனர். 

மார்க்கெட்டில், செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி காய்கறி விலை பல மடங்கு உயர்த்தி விற்பனை செய்வது தொடர்கிறது. இன்று காலையில் கிலோ ரூபாய் 20க்கு விற்ற தக்காளி இப்போது 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கிலோ 100 ரூபாய் விற்ற பூண்டு 140 க்கு விற்கப்படுகிறது உருளைக்கிழங்கை கிலோ 50க்கு விற்றது தற்போது 100 ரூபாய்க்கு உயர்த்தியுள்ளனர். இதேபோல் கேரட் உள்ளிட்ட காய்கறிகள் சில மணி நேரங்களில் உயர்த்தியுள்ளனர். 

பெட்ரோல் பங்கில் ஸ்டாக் இல்லை என தெரிவித்து உயர்ரக பெட்ரோல் மற்றும் போடுகின்றனர். இதனால் பெட்ரோல் பங்க் கூட்டம் உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து எச்சரிக்கை விடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com