தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 2-வது நபர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சுட்டுரைப் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:
"தில்லியில் இருந்து வந்து கரோனா வைரஸ் நோய்த் தொற்று பாதிப்பு காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர் குணமடைந்து வருகிறார். இவர் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர். அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட இரண்டு பரிசோதனைகளின் முடிவுகளில் இவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பில்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்."
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 23 ஆக உள்ளது.