கடலாடி அருகே ஆளில்லா விமானம் மூலம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே ஆப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் காவலர் பயிற்சிக்கு சென்ற போது ரத்த மாதிரி சேகரிப்பில் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
அதனை தொடர்ந்து அப்பகுதியில் கடலாடி வட்டாட்சியர் ஆலோசனையின் பேரில் ஆளில்லா விமானம் மூலம் காவல்துறையினர் கண்காணித்து அப்பகுதி உள்ள கிராமத்தின் எல்லையில் கிராமத்திற்குள் வெளி ஆட்கள் நுழையதவாறு தடை விதித்து பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈட்டுபட்டு வருகின்றனர்.