சென்னை: சென்னையில் ஊரடங்கு உத்தரவில் இன்று முதல் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான டீக்கடைகள், தனிக்கடைகள் திறக்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலைடியி, சென்னை மற்றும் சென்னையைத் தவிர்த்த பிற பகுதிகளுக்கு என தனித்தனியாக மே மாதம் 11ம் தேதி முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
அந்த வகையில்,. சென்னையில் டீக்கடைகள் மற்றும் தனிக்கடைகளை காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இதையடுத்து சென்னையில் இன்று காலை பெரும்பாலான டீக்கடைகள் மற்றும் தனிக்கடைகள் பலவும் திறக்கப்பட்டன.