தம்மம்பட்டியில் ஆடுகள் விலை உயர்வு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, தம்மம்பட்டியில் ஆடுகள் விலை உயர்ந்துள்ளது. 
தம்மம்பட்டியில் ஆடுகள் விலை உயர்வு
தம்மம்பட்டியில் ஆடுகள் விலை உயர்வு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, தம்மம்பட்டியில் ஆடுகள் விலை உயர்ந்துள்ளது. 

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில், பரண்கள் அமைத்தும், வெளி மேய்ச்சல் மூலமும், அதிகளவில் ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகளை, வளர்ப்புக்காகவும், கறிக்காவும் பல ஊர்களைச் சேர்ந்தவர்கள் வாங்கிச் செல்கின்றனர். 

பெரும்பாலான வியாபாரிகள், இப்பகுதி ஆடுகளைத்தான், விற்பனைக்காக சந்தைகளுக்குக் கொண்டு செல்கின்றனர். தற்போது, தீபாவளிப் பண்டிகை வருவதையொட்டி, வெளியூர் வியாபாரிகள், கறிக்கடை உரிமையாளர்கள் தம்மம்பட்டியில், ஆடுகளை அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். அதனால், தம்மம்பட்டி பகுதியில், ஆடுகளின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, நாட்டு ரக ஆடு  (உயிர் எடை) கிலோ 380 ரூபாய், தலைச்சேரி ரக ஆடு கிலோ 400 - 450 என விலை உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com