டான் டீ தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வலியுறுத்தி கூடலூர் எம்.எல்.ஏ., தொழிலாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து எம்.எல்.ஏ.திராவிடமணி கூறுகையில், நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள அரசு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வலியுறுத்தி நிர்வாகத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை.
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள்.
அதனால் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுடன் பந்தலூர் பஜாரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக எம்.எல்.ஏ.திராவிடமணி தெரிவித்தார்.