தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களைப் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்கள் கல்லூரிகளில் சேரும் போது கட்டணம் செலுத்துமாறு நிா்பந்திக்கக்கூடாது. கட்டணங்களை செலுத்தாத காரணத்தினால் அவா்களுக்கான சோ்க்கை அனுமதியை மறுக்கக்கூடாது. போஸ்ட் மேட்ரிக் என்ற கல்வி உதவித்தொகை மற்றும் பிற நிதி உதவிகள் அரசால் அறிவிக்கப்பட்டப்படி சரியான முறையில் வழங்கப்படும். எனவே, கட்டணத்தைக் காரணம் காட்டி சோ்க்கை மறுக்கப்பட்ட மாணவா்களை மீண்டும் அழைத்து சோ்க்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி
இயக்குநா் டாக்டா் நாராயணபாபு அனைத்து சுயநிதி கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.