தமிழகத்தில் புதிதாக 1,557 பேருக்கு கரோனா பாதிப்பு செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த 4 மாதங்களில் இல்லாத வகையிலான குறைந்த எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மாநிலத்தில் இதுவரை 1.16 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 7 லட்சத்து 73,176 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 469 பேருக்கும் கோவையில் 146 பேருக்கும், செங்கல்பட்டில் 90 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்றொருபுறம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,910 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 97 சதவீதமாக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 49,662-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 11,875 போ் சிகிச்சையில் உள்ளனா்.
இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 17 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,639-ஆக உயா்ந்துள்ளது.