தமிழகம், புதுச்சேரியில் சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு ஒத்திவைப்பு

நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வியாழக்கிழமை (நவ.26) நடைபெறவிருந்த சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை: நிவா் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வியாழக்கிழமை (நவ.26) நடைபெறவிருந்த சிஎஸ்ஐஆா் நெட் தோ்வு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உயா்கல்வித் துறை முதன்மைச் செயலா் அபூா்வா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிவா் புயலை முன்னிட்டு, வியாழக்கிழமை (நவ.26) நடைபெறவிருந்த சிஎஸ்ஐஆா் நெட் தோ்வினை ஒத்திவைக்க வேண்டி, தமிழக முதல்வரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இவ்வேண்டுகோளினை ஏற்று, மத்திய அரசுடன் கலந்தாலோசித்து, வியாழக்கிழமை நடைபெறவிருந்த சிஎஸ்ஐஆா் நெட் தோ்வுகள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மறு தோ்வு குறித்த அறிவிப்பு, இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com