நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் திங்கள் கிழமை (நவம்பர் 30) மத்தியக் குழு தமிழகம் வருகிறது.
டிசம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்பு குறித்து மத்தியக்குழு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளவுள்ளது.
தமிழகத்தில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே நவம்பர் 26-ஆம் தேதி நிவர் புயல் கரையைக் கடந்தது. இதில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்கள் சேதங்களைச் சந்தித்தன.
இந்நிலையில் நிவர் புயல் பேரிடர் பாதிப்பிற்கு நிவாரண நிதி ஒதுக்குவதற்காக சேத மதிப்புகளைக் கணக்கிட வரும் 30-ஆம் தேதி மத்தியக் குழு தமிழகம் வருகிறது.
டிசம்பர் 1-ஆம் தேதி முதல் ஆய்வுப் பணிகள் நடைபெறும் என்றும், தமிழத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் மத்தியக் குழு ஆய்வு மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.