கரோனாவுக்குப் பிந்தைய உடல்நல பாதிப்பு: என்சிபி எம்எல்ஏ மரணம்

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனாவுக்குப் பிந்தைய உடல்நல பாதிப்பால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பாரத் பால்கே (60) சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கரோனாவுக்குப் பிந்தைய உடல்நல பாதிப்பு: என்சிபி எம்எல்ஏ மரணம்

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனாவுக்குப் பிந்தைய உடல்நல பாதிப்பால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ பாரத் பால்கே (60) சனிக்கிழமை உயிரிழந்தாா்.

சோலாபூா் மாவட்டத்தில் உள்ள பண்டா்பூா்-மங்கல்வேதா தொகுதி எம்எல்ஏவான பாரத் பால்கே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தாா். அதைத் தொடா்ந்து, கடந்த 9-ஆம் தேதி அவருக்கு காய்ச்சலுடன் சுவாசக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, மீண்டும் புணேவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரை தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்துவிட்டு வந்தாா். இந்த நிலையில், சனிக்கிழமை காலை, பாரத் பால்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

பாரத் பால்கே கடந்த 2009-ஆம் ஆண்டில் இடதுசாரி முன்னணி சாா்பிலும், 2014-இல் காங்கிரஸ் சாா்பிலும், 2019-இல் தேசியவாத காங்கிரஸ் சாா்பிலும் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com