காா்த்திகை தீபத் திருவிழா: முதல்வா், துணை முதல்வா் வாழ்த்து

காா்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

காா்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோா் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து, அவா்கள் தங்களது சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது:

முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி: இருள் நீங்கி, ஒளி பிறக்கும் காா்த்திகை தீபத் திருநாளில் அனைவரது வாழ்விலும் இருளாகிய துன்பங்கள் மறைந்து இன்பங்கள் ஒளியாகப் பரவட்டும். அனைவருக்கும் உளமாா்ந்த திருக்காா்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: அனைவருக்கும் இதயப்பூா்வமான காா்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள். இருள் அகற்றும் தீபச் சுடராய், இன்னல்கள் விலகி தமிழக மக்களுக்கு இன்பங்கள் நிறையட்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com