ஹாத்ரஸ் வன்கொடுமை விவகாரத்தில் உத்தரப்பிரதேச அரசு உண்மையை மறைப்பதாக திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையினர், எஸ்.சி., மற்றும் எஸ்.டி. ஆகிய பிரிவுகளை சேர்ந்த மக்களின் பாதுகாப்பு கேள்விக்குரியாகியுள்ளது என்றும் கூறினார்.
இது குறித்து பேசிய திமுக எம்.பி. கனிமொழி, ''உத்தரப்பிரதேசத்தில் என்ன நடந்தது என்பதை பா.ஜ.க. மறைக்கிறது. பத்திரிகைத்துறையை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதும், தாக்கப்படுவதும் கடும் கண்டனத்திற்குரியது.
மேலும், உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் செல்லும் அரசியல் தலைவர்களும் தாக்கப்படுகின்றனர்'' என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஹாத்ரஸ் வன்கொடுமையை கண்டித்து திமுக மகளின் அணி சார்பில், ஆளுநர் மாளிகை நோக்கி கண்டனப் பேரணி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.