உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகில் அமரர் பி.கே. மூக்கையா தேவருக்கு புதிய சிலை நிறுவுவதற்கான இடத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை அருகில் பி.கே. மூக்கையா தேவருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது சொந்த செலவில் சிலை அமைக்கிறார்.
இதையடுத்து புதிய சிலை நிறுவுவதற்கான இடத்தை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பா. நீதிபதி, மாணிக்கம்.சரவணன், பெரிய புல்லான் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு இடத்தை ஆய்வு செய்தனர்.
மாவட்ட அவைத்தலைவர் ஐயப்பன் மேலும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தமிழரசன். தவசி. பாண்டியம்மாள். நகர செயலாளர் பூமா ராஜா மற்றும் உசிலம்பட்டி நகர ஒன்றிய செல்லம்பட்டி சேடபட்டி ஏழுமலை அதிமுகவினர் மற்றும் பொறியாளர்கள் 58 கிராம கால்வாய் சங்கத்தினர் டி.என்.டி சீர்மரபினர் நல வாரியம் மற்றும் கள்ளர் கல்விக் கழக நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆய்வு முடிவில் அருகில் உள்ள டீக்கடையில் அமர்ந்து டீ சாப்பிட்டனர். இதில் துணை முதல்வர் மற்றும் அமைச்சர் ஆர்.வி உதயகுமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.